Sports
சிக்கலில் ஷிகர் தவான் : தொடர் சொதப்பல் காரணமாக அணியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுகிறாரா ?
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், 3வது ஒருநாள் ஆட்டம் நாளை போர்ட் ஆப் ஸ்பெய்னில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியிலும் வென்று ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இருந்து வருகிறது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் பயங்கரமாக சொதப்பி வருகிறார் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் 1 ரன், இரண்டாவது ஆட்டத்தில் 23 ரன்கள், மூன்றாவது ஆட்டத்தில் 3 ரன்கள் என மோசமாகவே விளையாடினார் தவான்.
தொடர்ந்து, ஒருநாள் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இதனால், நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தவான். இதிலும் சோபிக்கவில்லை என்றால் அணிக்கு வெளியே அமரவைக்கப்படும் அபாயமும் இருக்கிறது.
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பெரிய சிக்கலாக இருந்து வந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் சொதப்பி வருவது அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நாளைய ஆட்டத்திலும், தொடர்ந்து நடைபெறவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி அணியில் தனது இருப்பைத் தக்கவைப்பார் என தவான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Also Read
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!
-
தமிழ்நாட்டு மண் ஒருநாளும் பாஜகவின் ஆணவத் திமிருக்கு அடிபணியாது: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
#Delimitation : தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு தரும் ‘ரெஸ்பெக்ட்’ உரிமைத்தொகை : சேலத்தில் முதலமைச்சர் பேச்சு!