Politics
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிட்டு மாணவியை அவமதித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைக் கண்டித்து கழக மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர் மரு.யாழினி அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியவை.
தவெக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களின் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோர்களைப் பிளாக் மெயில் செய்து வாக்களிக்க வைத்தனர். தற்போதும் தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது போல ஒரு வீடியோ வெளியானது எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக அவரது குழந்தையை கேடயமாக்கி அதில் இருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். நிறைய தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக குழந்தைகளை இது போன்று எமோஷனலா அப்யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று அமைச்சர் கீர்த்தனா அவர்கள் செய்ததும் அந்த மாதிரியான ஒரு ஹராஸ்மெண்ட்தான். அவங்க அரசு பள்ளிக்கு சென்று அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்காக எல்லோர் முன்பும் ஒரு மாணவியை அவமானப்படுத்தி இருக்காங்க. இது அமைச்சர் கீர்த்தனாவிற்கு அசிங்கமான செயலா இல்லையா.? அது தப்பாவே தெரியலையா அவங்களுக்கு.?
நீங்க அந்த வீடியோ பார்த்தாலே தெரியும் அவங்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற முன் முடிவுடன் அங்கு சென்றிருக்கிறார். அவர் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்கிறார் . அதற்கு அந்த குழந்தைகள் பதில் அளிக்கும் முன்பே மாணவர்களுக்கு தெரியவில்லை பார்த்தீங்களா என பேசுகிறார். ஆசிரியர் தெளிவாக மாணவர்களிடம் கேட்கும் போது அதற்கு சரியான தமிழ் அர்த்தம் கூறுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவி எழுந்து எவர்லாஸ்டிங்னா கடைசி வரைக்கும் என பதில் அளிக்கிறார். மாணவி பதில் அளித்ததும், நாம் கூறியதை மாணவிகள் பொய்யாக்கி விட்டனர் என அமைச்சர் பதறுகிறார்.
ஒரு நல்ல அமைச்சராக இருந்தால் மாணவி பதில் அளித்ததை ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மாணவி பதில் அளித்ததை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதி உங்க அப்பா என்ன செய்கிறார் என அடுத்த கேள்வியைக் கேட்கிறார். ஒரு சமூக புரிதல் உள்ள யாரும் எந்த மாணவர்களிடமும் உடனடியாக அப்பா பற்றி கேட்க மாட்டார்கள். எத்தனையோ குழந்தைகள் அப்பா இன்றி பள்ளியில் படிக்கின்றனர். அப்பாவின் பணியை வெளியே சொல்ல அசௌகரியமாக நினைக்கும் குழந்தைகள் உள்ளனர். இப்படி கேள்வி கேட்பது அவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும். சமூக புரிதல் இன்றி இப்படி கேள்வி கேட்பது அபத்தமான ஒன்று.
இன்னொன்று அமைச்சரிடம் ஆரம்பத்தில் அந்த மாணவி நார்மலாக நின்று மிக தைரியமாக பேசிக்கொண்டு இருக்கிறார் .ஆனால் அமைச்சரின் நடவடிக்கையால் அந்த குழந்தை பயந்து போய் கை கட்டி பேச ஆரம்பிக்கிறது. நம்ம திராவிட இயக்கத்தில் யார் முன்னாடியும் கை கட்டி நிக்க கூடாது என சொல்லிக் கொடுத்துள்ளோம். இவர்கள் பெரியாரை பெயரளவிற்கு கொள்கைத் தலைவராக வச்சிருக்காங்க ஆனா அந்த விவரம் எதுவுமே அவங்களுக்கு தெரியாது.
அந்த குழந்தை பயந்து போய் நிற்கும் போது குழந்தையின் பயத்தை போக்கி இயல்பாக்க கூட அவர் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் மறுபடியும் மறுபடியும் உனக்கு தெரியாது உனக்கு தெரியாது என்று மட்டம் தட்டும் எண்ணத்தோடு நடந்து கொண்டுள்ளார்.
இந்த சமூகத்தில் உனக்கு படிப்பு வராது படிப்பதற்கு தகுதி உனக்கு இல்லைன்னு சொல்லி படிக்க விடாம இருந்த இந்த சமூகத்துல படிப்பு எல்லாருக்குமானது என்ற கொள்கையை எடுத்து அதற்காக நூற்றாண்டு காலம் போராடி கல்வியை எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கோம். அப்படி இருக்கிற ஒரு சமூகத்தில் எந்தவிதமான வரலாறும் தெரியாது, என்னென்ன போராட்டங்கள் நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பள்ளிக்கு போய் குழந்தைகளை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசுறீங்க அப்படின்னா உங்களோட நோக்கம் என்ன.?
நல்லா படிச்ச மேதாவிகளுக்கே நிறைய பேர் இருக்கிற இடத்துல பயம் ஏற்பட்டு சில வார்த்தைகள் அவங்களுக்கு மிஸ் ஆகதான் செய்யும் அதுக்குன்னு உடனே அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல முடியாது இல்லையா.? அந்த குழந்தைக்கும் அப்படி தான் ஆசிரியர் கேட்டவுடன் சரியான பதில் அளிக்கிறார். அதற்கு முன்பு வரை தைரியமாக பதில் அளித்து வந்தவர் உங்க அப்பா என்ன செய்யறாங்க என கேட்டவுடன் அதற்கு கூலித்தொழிலாளர் என சொல்லும் போது அவரது குரல் தளர்கிறது. அந்த இடத்தில அந்த குழந்தையை சைக்கலாஜிக்கலா அமைச்சர் எப்படி ட்ரமடைஸ் பண்ணி இருக்காங்க என்று இப்ப வரை அவர்களுக்கு புரியவில்லை.
இன்றுமே அவங்கள தற்காத்துக்க தான் பேசுறாங்க, அவங்களோட தற்பெருமையை மட்டும் தான் பேசுறாங்களே தவிர்த்து அந்த குழந்தை மேல அவங்க உருவாக்கின பாதிப்பு என்ன என அவங்க கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் இரண்டு கேள்விக்கு குழந்தை பதில் சொல்லிய உடன் அமைச்சர் தனக்கு இன்சல்ட் ஆனதாக நினைத்து ‘இதே கேள்வியை கடைசி பெஞ்ச் மாணவர்களிடம் கேட்டால் தெரியாது’ என கூறுகிறார். கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு அது தெரியாது என இவர்களுக்கு எப்படி தெரியும்.? முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச் என்ற பாகுபாடு எல்லாம் இருக்க கூடாது என கற்பித்தல் முறையிலேயே மாற்றம் கொண்டு வந்து இப்போது அனைவரும் நன்றாக படிக்கும் சூழலை உண்டாக்கி வருகிறோம்.
இப்போது வந்து கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தெரியாது அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது போல பேசி மாணவர்களை மட்டம் தட்டுகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது மாதிரி ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கு மாணவர்கள் மத்தியில் பேச தயங்கிய மாணவனை ஊக்கப்படுத்தி அவரது பயத்தை போக்கி பேசவைத்தார். அதன பிறகு அந்த மாணவனும் அழகா பேசுவார்.
உனக்கு படிப்பு வராது நீ முட்டாள் உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றது இந்த தவெக அரசு. உன்னால முடியும் நாங்க இருக்கோம் என தட்டிக்கொடுத்து படிக்க வைத்தது திராவிட மாடல் அரசு.
ரீல்ஸ் மோகம் ரீல்ஸ் ஆட்சினு சொன்னா மட்டும் அவங்களுக்கு கோபம் வருது ஆனா ரீல்ஸ்னால தான் நேற்று மருத்துவர்கள் , செவிலியர்கள் போராட்டம் செஞ்சு இருக்காங்க. தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்வதால் எங்க வேலையைப் பார்க்க முடியவில்லை என கூறி இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை நிறுத்த சொல்லி போராட்டம் செஞ்சிருக்காங்க.
தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஹாஸ்பிடல்ஸ், ஸ்கூல்ஸ் என்று அனைத்து இடங்களிலும் போய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு தைரியம் இருந்தால் கமிஷ்னர் ஆபீஸ்ல , கலெக்டர் ஆபீஸ்ல போய் ஆய்வு செய்து ரீல்ஸ் போடுங்களேன் பார்ப்போம். பள்ளிகள் , மருத்துவ மனைகளில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.
இப்போது அமைச்சர் கீர்த்தனா விக்டிம் கார்ட் பிளே பண்றாங்க இது எந்த விதமான மனநிலை அந்த இடத்தில் விக்டிம் அந்த குழந்தை தான். அந்த வீடியோவ அந்த குழந்தையின் பெற்றோர்கள் , நண்பர்கள் , உறவினர்கள் பார்த்து என்ன பேசுவாங்க நாளைக்கு அந்த குழந்தைக்கு என்ன கான்ஃபிடன்ஸ் இருக்கும். இந்த அரசால குழந்தைகளுக்கு கான்ஃபிடன்ஸ் பில்ட் பண்ண முடியலனா கூட பரவாயில்லை ஆனால் நாங்க கஷ்டப்பட்டு பில்ட் பண்ணி வச்சிருக்க அந்த கான்பிடன்ஸ தயவு செஞ்சு உடைக்காதீங்க.
திமுக ஆட்சியின் போது பள்ளிக்குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தினோம். எண்ணும் எழுத்தும் , இல்லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல்ஸ்னு அத்தனை திட்டங்கள் கொண்டு வந்து மாணவர்களின் லிட்ரசிய இம்ப்ரூவ் பண்ணி இருக்கோம். அவங்களை என்கரேஜ் செய்யனும் என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற ஒரு விழாவை எடுத்து அவங்களைப் பெருமைப்படுத்தினோம். ஜாப்பனீஸ், பிரெஞ்சு, கொரியன் எல்லா லாங்குவேஜ்லயும் பேச வச்சிருக்கோம்.
அவர்களை கல்வி சுற்றுலாவிற்காக வெளிநாடு அழைத்து சென்றோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின அந்த குழந்தைகளோட கான்ஃபிடன்ஸ தயவு செஞ்சு உடைச்சிராதீங்க. உங்க துறையில கவனம் செலுத்துங்க. ஆட்சிக்கு வந்து 50 நாள் ஆயிடுச்சு. இதுவரை என்ன இன்வெஸ்ட்மென்ட் இங்க கொண்டு வந்திருக்காங்க எனற தகவல் இல்லை.
கடந்த ஆட்சியில் தொழில் தொடங்க பணம் கேட்கபட்டது என புகார் சொன்னதற்கு ஆதராம் எங்கே என கேட்டபோது என் ட்வீட்ல ஒருத்தர் கூறினார் அதை ரீ டிவிட் செய்துள்ளேன் பாருங்க என சொல்லும் அளவு நாலேஜ் வச்சிருக்க மினிஸ்டர் எப்படி எங்க ஸ்டூடண்ட்ஸ பார்த்து இந்த மாதிரியான கேள்வி கேட்கலாம். குழந்தைகளை பார்த்து கேட்கறது ஹீரோயிசம்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அது ஹீரோயிசம் கிடையாது. 2000 கோடி கல்வி நிதி கொடுக்கலனாலும் எங்க குழந்தைகளோட கல்வியை நாங்க பார்த்துப்போம். அவங்களுக்கான திட்டங்களை நாங்க கொண்டு வருவோம்னு சொல்லி குழந்தைகளுக்காக தொடர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடுனார் எங்க கழக தலைவர் அவர்தான் ஹீரோ. ஹீரோயிசம் ரீல்ஸ்ல இல்ல. நிஜமா நீங்க இறங்கி மக்கள் சேவை பண்ணுறது தான் ஹீரோயிசம். சூட்டிங் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம். குழந்தைகளை தயவு செய்து இந்த மாதிரி ரீல்ஸ்களில் இருந்து கீப் தெம் அவுட் என தெரிவித்தார்.
Also Read
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!
-
“விளம்பர வெறிக்காகப் பிஞ்சு குழந்தைகளைப் பயன்படுத்தும் த.வெ.க!” : தி.மு.க கண்டனம்!
-
ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!