Politics
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பீகாரில் சிறப்பு வாக்காளர்கள் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தொகுதி வாரியாக வெளியாகி உள்ள பட்டியல் அடிப்படையில் கணிக்கிட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு வாக்காளர்கள் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆதாரை ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!