Politics

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நோக்கி செருப்பு வீச்சு... பின்னணியில் சனாதனம் - முழு விவரம் உள்ளே !

உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமை நீதிபதி மீது தனது ஷூவை கழற்றி வீசி தாக்க முயன்றுள்ளார்.

அவரை பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வழக்கறிஞர் சனாதன தர்மத்தை அவமரியாதை செய்வதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்று கோஷமிட்டவாறு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் உச்சமன்றத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்படாமல் அமைதியாக இருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் கவனம் சிதற வேண்டாம். இந்த நிகழ்வால் நான் திசை திருப்பப்படவில்லை என்று கூறினார்.

மேலும் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தங்கள் வாதத்தை மேற்கொள்ளும்படி கூறினார். இதனிடையே தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: ”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!