Politics
“ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொடரும் சிக்கல்கள்!” : மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 6) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில், “ஆதார் அட்டை பயோமெட்ரிக்கில் தொடரும் சிக்கல்கள்! தவிக்கும் பயனாளிகள்.. தீர்வில் தாமதம் ஏன்?” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு,
ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் எழும் சிக்கல்கள் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பில் அனுமதி இல்லாததால் பல்வேறு திட்டங்களின் கீழ் உண்மையான பயனாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மங்கலான கைரேகைகள் மற்றும் பழைய சரிபார்ப்பு கருவியின் கோளாறுகளால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் அவற்றை சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
வேகமாக நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : எங்கு, எப்போது கரையை கடக்கிறது தெரியுமா?
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!
-
தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!