Politics
“ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொடரும் சிக்கல்கள்!” : மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 6) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில், “ஆதார் அட்டை பயோமெட்ரிக்கில் தொடரும் சிக்கல்கள்! தவிக்கும் பயனாளிகள்.. தீர்வில் தாமதம் ஏன்?” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு,
ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் எழும் சிக்கல்கள் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பில் அனுமதி இல்லாததால் பல்வேறு திட்டங்களின் கீழ் உண்மையான பயனாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மங்கலான கைரேகைகள் மற்றும் பழைய சரிபார்ப்பு கருவியின் கோளாறுகளால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் அவற்றை சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!