Politics
“ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் தொடரும் சிக்கல்கள்!” : மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.
இந்நிலையில், இன்றைய (ஆகஸ்ட் 6) நாள் நாடாளுமன்ற கூட்டத்தில், “ஆதார் அட்டை பயோமெட்ரிக்கில் தொடரும் சிக்கல்கள்! தவிக்கும் பயனாளிகள்.. தீர்வில் தாமதம் ஏன்?” என தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த விரிவான விவரம் பின்வருமாறு,
ஆதார் அட்டைகளின் பயோமெட்ரிக் சரிபார்ப்பில் எழும் சிக்கல்கள் குறித்து திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயோமெட்ரிக் சரிபார்ப்பில் அனுமதி இல்லாததால் பல்வேறு திட்டங்களின் கீழ் உண்மையான பயனாளிகளின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மங்கலான கைரேகைகள் மற்றும் பழைய சரிபார்ப்பு கருவியின் கோளாறுகளால் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் அவற்றை சரிசெய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!