Politics
மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும் : MLA-க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் !
மணிப்பூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பாஜகவை சேர்த்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதனைத் தொடர்ந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும் என்று 21 எம்.எல்.ஏக்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாஜகவை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் உள்பட 21 பேர் சேர்ந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அமைதி, இயல்பு நிலையை ஏற்படுத்த முடியவில்லை. எனவே, குடியரசு தலைவர் ஆட்சியை நீக்கிவிட்டு மீண்டும் மக்கள் ஆட்சி ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சுமார் 60,000 பேர் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இன்னும் முகாம்களில் தங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
Also Read
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!