Politics
"75 ஆண்டுகளில் இந்த அளவுக்கா நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது" - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்காதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட கவிதையை குறிப்பிட்டு அவர் மீது 6 பிரிவுகளில் குஜராத் அரசு வழக்கு பதிவு செய்தது. அதில் மத உணர்வுகளுக்கு எதிரானது, தேச ஒன்றுமைக்கு எதிரானது என்று வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்காதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபை ஓகா, உச்சால் பூயான் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் குஜராத் அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "கவிதையில் மத வெறுப்பு எதுவும் இல்லை. மாறாக அன்பு, அகிம்சை கருத்துக்கள்தான் உள்ளன. அநீதியை அன்பு மூலம் வெல்லும் கருத்துக்கள்தான் உள்ளன. நாடு குடியரசாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு கவிதை, நகைச்சுவை நிகழ்ச்சி வெறுப்புக்கு வழிவகுக்கும் என்று கூறும் அளவுக்கு நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற வழக்குகள் சுதந்திரமான ஒரு சமூகத்தின் கருத்துக்களை நசுக்குவதாக அமையும். ஒரு தகவலை சித்தரிக்கும் உரிமை எழுத்தாளருக்கு, கவிஞருக்கு உண்டு. அரசியலமைப்பு வழங்கி உள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இம்ரான் பிரதாப்காதி மீதான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!