Politics
"75 ஆண்டுகளில் இந்த அளவுக்கா நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது" - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் இம்ரான் பிரதாப்காதி சமூக ஊடகத்தில் வெளியிட்ட கவிதையை குறிப்பிட்டு அவர் மீது 6 பிரிவுகளில் குஜராத் அரசு வழக்கு பதிவு செய்தது. அதில் மத உணர்வுகளுக்கு எதிரானது, தேச ஒன்றுமைக்கு எதிரானது என்று வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி இம்ரான் பிரதாப்காதி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபை ஓகா, உச்சால் பூயான் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் குஜராத் அரசு மீது உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது குறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "கவிதையில் மத வெறுப்பு எதுவும் இல்லை. மாறாக அன்பு, அகிம்சை கருத்துக்கள்தான் உள்ளன. அநீதியை அன்பு மூலம் வெல்லும் கருத்துக்கள்தான் உள்ளன. நாடு குடியரசாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு கவிதை, நகைச்சுவை நிகழ்ச்சி வெறுப்புக்கு வழிவகுக்கும் என்று கூறும் அளவுக்கு நாடு தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற வழக்குகள் சுதந்திரமான ஒரு சமூகத்தின் கருத்துக்களை நசுக்குவதாக அமையும். ஒரு தகவலை சித்தரிக்கும் உரிமை எழுத்தாளருக்கு, கவிஞருக்கு உண்டு. அரசியலமைப்பு வழங்கி உள்ள கருத்து சுதந்திரத்துக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது" என்று கூறப்பட்டுள்ளது. அதோடு இம்ரான் பிரதாப்காதி மீதான வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!