Politics
"விரைவில் அதிமுகவை முடித்து வைத்து விடுவார் பழனிசாமி" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
ரூ.40.11 லட்சம் மதிப்பிட்டில் சென்னை,திருப்பள்ளி தெரு, வால்டாக்ஸ் ரோடு, பத்பநாபா திரையரங்கம் அருகில் அமைய உள்ள மூன்று பயணிகள் பேருந்து நிழற் குடை, அதே பகுதியில் ரூ.2.42 கோடி மதிப்பிட்டில் சென்னை நடுநிலைப்பள்ளி புதிய கட்டடத்திற்க்கு சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் மூலம் மேற்கொள்ளும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று எட்டி பார்ப்பது எங்கள் வேலை இல்லை. திமுக கூட்டணி மீண்டும் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் நல்ல சூழல் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி விரைவில் அதிமுகவை முடித்து வைத்து விடுவார். அதற்கான வேலைகளை அவர் விரைந்து செய்து வருகிறார். ஏற்கனவே அதிமுகவுக்கு 8 முறை தோல்வியை வாங்கி தந்து இருக்கிறார். வரும் தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து அதிமுவை முடித்து விடுவார்" என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்ற அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பணிகள் முடிவடைந்ததும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் மே மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்"என்று தெரிவித்தார்.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?