Politics
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேண்டும் - கனிமொழி MP !
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அனைவருக்கும் பட்டு சேலைகளை வழங்கினார்கள்
இதை தொடர்ந்து பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைக்காக தொடர்ந்து போராடி, பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க நாம் அவருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு நம் மீது மூன்று மொழிகளை திணிக்க கூடிய முயற்சியை செய்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையில் கையொப்பமிட்டால் தான் நிதி கிடைக்கும் என்கிறது. பிற மாநிலங்கள் எல்லாம் கையெழுத்து விட்டு விட்டது. தமிழகம் மட்டும் தனித்து நிற்க்கிறது. தமிழ்நாடு எப்போதுமே தனித்திருக்க கூடிய ஒரு மாநிலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
1971க்கு பிறகு மக்கள் தொகை கணக்கு எடுக்கப்படவில்லை. தமிழகத்திலும் கேரளத்திலும் மக்கள் தொகையை நாம் குறைத்துள்ளோம். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டதால் பெண்களின் கல்வி உயர்ந்திருக்கிறது. மருத்துவ வசதி உயர்ந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு குறைக்கவில்லை. அங்கு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தொகுதி குறைத்தால் தமிழகத்திற்கு தொகுதி குறைந்து விடும். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிகமான தொகுதிகள் கிடைக்கும்.
இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 39 பேர் போய் போராடும்போதே ஒன்றிய அரசு நமது கருத்துக்கு செவி சாய்க்க மறுக்கிறது. நாளை தென்னிந்தியாவில் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்து விட்டால், இங்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட பாஜகவினர் வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போதே தமிழகத்திற்கு நீதி கொடுக்க மறுக்கிறார்கள். இதில் தொகுதியை குறைத்து விட்டால் என்னவெல்லாம் செய்வார்கள் ?"என்று கூறினார்.
Also Read
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!
-
“மே 4ஆம் தேதி உழைப்பிற்கான பலன் கிடைக்கும்... நல்லாட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி.. சிகரத்துக்கு மகுடம்” : முரசொலி தலையங்கம்!
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!