Politics
இந்தியாவுக்கென ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடல் மட்டுமே- இங்கிலாந்து பேராசிரியர் புகழாரம் !
The Wire இணையதள நேர்காணலில் கிங்க்ஸ் பல்கலைகழகத்தினல் இந்திய அரசியல் சமூகவியல் பற்றி வகுப்பெடுக்கும் பேராசிரியர் கிறிஸ்டோப் ஜெபர்லோ நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் பேசியுள்ள அவர், கல்வியாக இருக்கட்டும், தனி நபர் வருமானமாக இருக்கட்டும், ஊட்டச்சத்து குறைபாடாக இருக்கட்டும், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கையாக இருக்கட்டும் எந்தவொரு அளவுகோலிலும் தெற்கிற்கும் வடக்கிற்கும் பாரதூர வேறுபாடு இருக்கிறது.
கல்வியின் மூலம் சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பான மாணவர்களை தமிழ்நாடு உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுக்கென்று ஒரு மாடல் இருக்குமென்றால் அது தமிழ்நாடு மாடலாக மட்டுமே இருக்க முடியும்"என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிகையில் பொருளாதாரம், கல்வி, மருத்துவம், அடிப்படை கட்டமைப்பு என அனைத்திலும் தமிழ்நாடு அரசு முன்னிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடித்தட்டு மக்களுக்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் திட்டங்களே இந்த வெற்றியை பெற காரணமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!