Politics
வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
வழக்கறிஞர்கள் திருத்த சட்ட மசோதாவை முழுமையாக திரும்பபெறவேண்டும் என்று ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது வழக்கறிஞர் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதலாகும். 2014 முதல், முதலில் NJAC மூலம் நீதித்துறை நியமனங்களைக் கடத்த முயற்சிப்பதன் மூலமும், பின்னர் நீதித்துறை நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கான கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறக்கணிப்பதன் மூலமும் பாஜக அரசு நீதித்துறையின் சுதந்திரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தி வருகிறது.
இப்போது, பார் கவுன்சில்கள் மீது கட்டுப்பாட்டைக் கோருவதன் மூலம், சட்டத் தொழிலின் சுயாட்சியை அழிப்பதன்மூலம் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதே அதன் நோக்கமாகும். "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பு இந்த மசோதாவில் தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் அது தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று மறுபெயரிட விரும்புகிறது. தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல; அது எங்கள் அடையாளம்!
இந்திய அளவில் போராட்டங்கள் வலுத்ததன் காரணமாக வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்றாலும், மறுபரிசீலனை செய்து அந்த மசோதாவை மீண்டும் செயல்படுத்த இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும். இந்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கோருகிறது"என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!