Politics
சட்டப்பேரவையில் ஒலித்த “இவன் தான் அந்த சார்!” : அ.தி.மு.க.வினருக்கு தி.மு.க பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜனவரி 5ஆம் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கி, இன்று 5ஆவது நாளாக நடைபெற்றது.
சட்டப்பேரவையின் 5ஆவது நாளில், தமிழ்நாட்டின் கட்டமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் துறைசார்ந்த அமைச்சர்களிடம் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்டது. அதில் கலந்துகொள்ள வருகை தந்த தி.மு.க.வினர், “இவன் தான் அந்த சார்” புகைப்பட பலகைகளை ஏந்தி வந்தனர்.
இந்நிகழ்வு, கடந்த 4 நாட்களாக “யார் அந்த சார்?” என பேட்ச் அணிந்து வந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதிலடியாக அமைந்தது. “இவன் தான் அந்த சார்!” என அச்சிடப்பட்ட பலகையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த அ.தி.மு.க நிர்வாகி சுதாகர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், “‘யார் அந்த சார்’ என பேட்ச் அணிந்து நாள்தோறும் சட்டப்பேரவைக்கு வந்து, விடை தெரியாமல் இருந்த அதிமுகவினருக்கு இன்று விடை கொடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!