Politics
"மத மோதலை உருவாக்கக்கூடிய சூழலை பாஜக உருவாக்கி வருகிறது " -CPIM ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி !
டாக்டர் அம்பேத்கரின் 69வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணல் அம்பேத்கர் சாதி மத பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என பாடுபட்டவர். அவரது தலைமையில் அரசியல் சட்டம் வரையறுக்கப்பட்டது. நல்லவர் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டம் நீடித்து நிற்கும்.
கெட்டவர் ஆட்சிக்கு வந்தால் அந்த சட்டம் நீடித்து நிற்காது என அம்பேத்கர் கூறியது தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய பொருளாதாரத்தை அதானி அம்பானி போன்றவர்களுக்கு ஒப்படைக்க பாஜக செயல்பட்டு வருகிறது. மத மோதலை உருவாக்கக்கூடிய மோசமான சூழலை பாஜக உருவாக்கி வருகிறது..
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்காலமாக ஒன்றிய அரசாங்கம் நிவாரணத்துக்காக 2000 கோடி ஒதுக்க வேண்டும் என மாநில அரசு கூறி இருக்கிறது. மாநில அரசு கோரிய அந்த நிதியை ஒன்றிய அரசு கொடுத்து உதவ வேண்டும்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!