Politics
மகாராஷ்டிரா - INSTA-வில் 5.6M Followers.. தேர்தலில் பெற்ற வாக்குகளோ 155.. யார் இந்த BIGG BOSS அஜாஸ் கான்?
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்களும், நாடு முழுவதும் 46 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 2 மக்களைவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களின் வாக்கு எண்னிக்கை நேற்று (நவ.23) ஒரே கட்டமாக நடைபெற்று வெளியானது.
இதில் ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளார். அதே போல் மகாராஷ்டிராவின் நன்தேட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சவான் ரவீந்திர வசந்த்ராவும் வெற்றி பெற்றார்.
இந்த சூழலில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பிரபல நடிகரும், பிக் பாஸ் பிரபலமுமான அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. அஜாஸ் கான் ஒரு நடிகராவார். இவர் இந்தி பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானார். பிக் பாஸை தொடர்ந்து அரசியலில் குதித்த இவர், ஆசாத் சமாஜ் (கன்சி ராம்) கட்சியில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத்த தேர்தலில் மகாராஷ்டிராவின் வெர்சோவா (VERSOVA) தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள சிவ சேனா(உத்தவ் பிரிவு) வேட்பாளர் ஹரூன் கான் வெற்றி பெற்றுள்ளார். இந்த சூழலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற பட்டியலில் பிக்பாஸ் பிரபலம் அஜாஸ் கான் உள்ளார்.
ஆசாத் சமாஜ் (கன்சி ராம்) கட்சி சார்பில் போட்டியிட்ட அஜாஸ் கான் வெறும் 155 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இது தற்போது அனைவர் மத்தியிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!