Politics
நேற்று தமிழ்நாடு இன்று கேரளா : ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு - ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்!
இந்தியாவில் தாங்கள் ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அம்மாநில அரசுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில், மாநில அரசுகள் கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அம்மாநில ஆளுநர்கள் அடாவடித்தனமாக நடந்து கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டும் என்றே இழுத்தடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது, ஒரு ஆளுநராக இருந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளில் தனது சனாதன கருத்துக்களைப் பேசி வருகிறார். மேலும் பா.ஜ.க தலைவர்போல் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் 98 பக்கங்கள் கொண்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைப் பின்பற்றி தற்போது கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இருக்கிறார். 3 மசோதாக்கள் 2 ஆண்டுகளாகவும், 5 மசோதாக்கள் ஓராண்டாகவும் நிலுவையில் உள்ளதாகக் கேரள அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆளுநருக்கு எதிராகக் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுவரை தமிழ்நாடு, கேரளா, பஞ்சாம் அரசுகள் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!