Politics
”இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை”.. மோடி அரசாங்கத்தை விமர்சித்த பாரக் ஒபாமா!
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இந்த மாநிலத்தில் எழுந்துள்ள பிரச்சனையில் தலையிட்டு ஒன்றிய அரசு அமைதியை ஏற்படுத்த வேண்டும், பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் செல்லாமல் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். கடந்த 20ம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.
ஜூக் 21ம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றனர். பின்னர் நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் சந்தித்து உரையாடினார்.
இந்நிலையில், மோடி அரசாங்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா விமர்சித்துள்ளார். ஏதென்ஸ் நகரில் CNN ஆங்கில தொலைக் காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது, அமெரிக்க அதிபர் பைடன், இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து உரையாடுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய பாரக் ஒபாமா, "இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால், 'இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை எனில், ஒரு கட்டத்தில் இந்தியா பிரிந்து செல்வதற்கான வலுவான வாய்ப்பாக அதுவே அமையும்' என்பதே என்னுடைய வாதமாக இருந்திருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!