Politics
“கார்களில் போலிஸ் ஸ்டிக்கர்ஸ்” - Tollgate கட்டணத்திற்கு பயந்து பா.ஜ.க-வினர் செய்த மோசடி அம்பலம்!
புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியம் கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாஹேவில் நடைபெற்ற புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் பங்கேற்பதற்காக, புதுச்சேரியிலிருந்து குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய் சரவண குமார் சென்றார்.
அப்போது அவருடன் 50 க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சென்றுள்ளனர். இதனிடையே அமைச்சருடன் மாஹேவுக்கு சென்ற பா.ஜ.கவினர் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு சுமார் 700 கி.மீ தொலைவு உள்ள நிலையில் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி களில் பா.ஜ.க-வினர் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்க வாகனம் தவிர்த்து, 3க்கும் மேற்பட்ட தங்களது சொந்த கார்களில் பா.ஜ.க-வினர் போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
பா.ஜ.க கொடி பொருத்திய தங்களது சொந்த வாகனங்களில், போலிஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சென்ற மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!