Politics
ஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி மதத்தின் பேரில் நாட்டை துண்டாக்க பார்க்கிறது! கடுகடுக்கும் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் காமராஜரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பல இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் நிர்வாகிகள் காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலவர் நாராயணசாமி, "காமராஜர் காலத்தில் பிறந்த நாளுக்காக செய்யப்படும் விளம்பரம் தொகைகளை பள்ளிகளுக்கு பயன்படுத்துங்கள் என்று காமராஜர் கூறுவார். ஆனால் இன்று அப்படி நடப்பது அல்ல. இந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வியாபாரமாகிவிட்டது. என்று வேதனையை தெரிவித்தார்.
பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும். இந்திய நாட்டில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் விஷ பூச்சியாக உள்ளது. மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட நினைக்கிறது.
இஸ்லாமிய மக்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல் அதிகரித்து விட்டது. தேசம் முழுவதும் உள்ள 15 கோடி இஸ்லாமியர்களை இந்தியாவில் வெளியேற்றவும் துடிக்கிறார்கள். அது நடக்க நாம் அனுமதிக்க கூடாது. அதற்கு எதிரான போராட்டத்தை கொண்டு செல்வோம்” என அவர் தெரிவித்தார்.
Also Read
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!