Politics
இள ரத்தங்களை ஈர்க்கும் திறன் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் - கொ.ம.தே.க ஈஸ்வரன் வாழ்த்து !
தி.மு.க இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு :
'' தி.மு.க.வில் இளம் இரத்தத்தை பாய்ச்சக் கூடிய, தமிழக இளைஞர்களை தி.மு.க பக்கம் ஈர்க்க கூடிய பொறுப்புகளை சுமக்க கூடிய பதவியாக இளைஞரணி செயலாளர் பதவி பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த பதவிக்கு திறமையும், தகுதியும் உள்ள சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்திருப்பது வரவேற்புக்குரியது.
அந்த புதிய பொறுப்பில் தி.மு.க.வின் தலைவர் அவர்கள் 32 ஆண்டுகாலம் அலங்கரித்த பொறுப்பில் அவரை போலவே இவரும் தமிழக இளைஞர்களுடைய அன்பை பெற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து தி.மு.க தலைவரோடு சேர்ந்து வெற்றிக்கு வித்திட்ட சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் '' ஈஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!