Politics
தமிழிசை கருத்துக்கு இந்த பாரதியார் வரிகள் பொருந்தும் : முத்தரசன் சாடல்!
தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அண்மையில் கூறினார். இதற்கு தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது;
நாடாளுமன்ற தேர்தல் முடிந்த ஏப்ரல் 18 க்கு பின்னர், தோல்வியை ஒப்புக்கொண்டு காணாமல்போன பா.ஜ.க தலைவர் சகோதரி தமிழிசை அ.தி.மு.கவின் நிர்பந்தம், நெருக்கடியால் நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளிலும் தி.மு.க-வின் வெற்றி உறுதிபட்டதை நன்கறிந்த தமிழிசை, தன்னை மக்கள் மறந்து விடாமிலிருக்க பரபரப்பு செய்திகளையும், கருத்துகளையும் கூறி வருவது வாடிக்கையாகிவிட்டது. பொய் சொல்லியே தேர்தலில் வெற்றிபெற்று விடலாம். அது ஒன்றுதான் பா.ஜ.க.வின் மூலதனமாக இருக்கிறது, அதைத்தானே மோடியும் செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் மோடி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதில் கொள்கை அடிப்படையில் உறுதியாக இருந்து, இயக்கங்களை முன் எடுத்ததையும், அதில் தி.மு.க தலைவர் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்களை மத்திய - மாநில ஆட்சியாளர்கள் மீது முன் மொழிந்ததையும் அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பா.ஜ.க.வோடு பின்வாசல் வழியாக பேசிவருவதாக தமிழிசை கூறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற பேச்சு என்பதோடு, கடைந்தெடுத்த பொய் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டுகிறது. திமுக தலைவர் குறித்த தமிழிசையின் இக்கருத்து பாரதியார் பாடிய “பொய் சொல்ல கூடாது பாப்பா” என்ற மகத்தான பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. என அவர் தெரிவித்தார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!