murasoli thalayangam
"உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; சட்டமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி"- முரசொலி தலையங்கம்!
கடந்த 2016-ம் ஆண்டு நடக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் 2019-ம் டிசம்பரில் நடைபெறுகிறது. இதனை நடத்தாமல் இருப்பதற்கு எத்தனையோ பொய்க் காரணங்களை அ.தி.மு.க அரசு சொல்லி வந்தது.
ஆனால் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையில் குட்டியதால், வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்தான் மக்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
மத்திய – மாநில அரசின் திட்டங்கள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகத்தான் மக்களிடையே சொல்லும். அதனால் தான் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என மகாத்மா காந்தி கிராமப்புற ஆட்சி குறித்து தெரிவித்தார். ஆனால் இன்றைய மத்திய – மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகளாக மாறிவிட்டன.
குறிப்பாக அரசியல் சுயநல நோக்கம் மட்டுமே எடப்பாடி அரசுக்கு இருக்கிறது. அதனால் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் நடைபெறும் இந்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது.
உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநிலத்தில் நடக்கும் ஊழலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமாக 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமைய வேண்டும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!