murasoli thalayangam
"உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; சட்டமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி"- முரசொலி தலையங்கம்!
கடந்த 2016-ம் ஆண்டு நடக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் 2019-ம் டிசம்பரில் நடைபெறுகிறது. இதனை நடத்தாமல் இருப்பதற்கு எத்தனையோ பொய்க் காரணங்களை அ.தி.மு.க அரசு சொல்லி வந்தது.
ஆனால் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையில் குட்டியதால், வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்தான் மக்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
மத்திய – மாநில அரசின் திட்டங்கள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகத்தான் மக்களிடையே சொல்லும். அதனால் தான் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என மகாத்மா காந்தி கிராமப்புற ஆட்சி குறித்து தெரிவித்தார். ஆனால் இன்றைய மத்திய – மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகளாக மாறிவிட்டன.
குறிப்பாக அரசியல் சுயநல நோக்கம் மட்டுமே எடப்பாடி அரசுக்கு இருக்கிறது. அதனால் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் நடைபெறும் இந்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது.
உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநிலத்தில் நடக்கும் ஊழலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமாக 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமைய வேண்டும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
கோப்பையை வென்றும் தொடரும் சோகம்... அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த RCB அணி... விவரம் உள்ளே !
-
"குற்ற உணர்ச்சியே இல்லாமல் பொறுப்பற்று பேசுகிறார் விஜய்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் !
-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அனுபவிக்கும் கொடுமைகள் - பாஜக அரசின் அவலத்தை அம்பலப்படுத்திய முரசொலி !
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!