murasoli thalayangam
"உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; சட்டமன்றத் தேர்தலுக்கு தொடக்கப்புள்ளி"- முரசொலி தலையங்கம்!
கடந்த 2016-ம் ஆண்டு நடக்கவேண்டிய உள்ளாட்சி தேர்தல் 2019-ம் டிசம்பரில் நடைபெறுகிறது. இதனை நடத்தாமல் இருப்பதற்கு எத்தனையோ பொய்க் காரணங்களை அ.தி.மு.க அரசு சொல்லி வந்தது.
ஆனால் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தலையில் குட்டியதால், வேறு வழியின்றி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்தான் மக்களோடு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.
மத்திய – மாநில அரசின் திட்டங்கள் பெரும்பாலும் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாகத்தான் மக்களிடையே சொல்லும். அதனால் தான் இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது என மகாத்மா காந்தி கிராமப்புற ஆட்சி குறித்து தெரிவித்தார். ஆனால் இன்றைய மத்திய – மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கான அரசுகளாக மாறிவிட்டன.
குறிப்பாக அரசியல் சுயநல நோக்கம் மட்டுமே எடப்பாடி அரசுக்கு இருக்கிறது. அதனால் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் நடைபெறும் இந்த உள்ளாட்சி தேர்தல் முக்கியமானது.
உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநிலத்தில் நடக்கும் ஊழலாட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலமாக 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொடக்கப்புள்ளியாக இது அமைய வேண்டும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“கிரீன்லாந்து விற்கப்படுவதற்கான சொத்து அல்ல; அது மக்களின் உரிமை”: ட்ரம்ப்-க்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!
-
இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 61 அதிநவீன புதிய பேருந்துகள்... சிறப்பம்சங்கள் என்ன? - விவரம்!
-
“தனது ஆட்சியில் ஒழுங்காக எதையும் தர வக்கற்றவர், இப்போது பேசுகிறாரா?” - பழனிசாமி மீது முரசொலி தாக்கு!
-
“தமிழ்நாட்டை உயர்த்திய திராவிட மாடல்” : உலகம் உங்கள் கையில்” விழவில் துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“உங்கள் கரியருக்கான LaunchPad இந்த மடிக்கணினி” : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!