M K Stalin
“ரூ.29.96 கோடியில் காவலர்களுக்கு நலத்திட்டங்கள் - பெண் காவலர்களுக்கு சிறப்பு திட்டங்கள்” : முதலமைச்சர்!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல் துறை மானியக் கோரிக்கையின் போது நடைபெற்ற விவாதத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்,
“தமிழ்நாடு காவல் துறையில் தி.மு.க. ஆட்சியில்தான் பல்வேறு நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதில், முத்தாய்ப்பாக நான் சொல்ல வேண்டுமென்றால், ஒரு பெரிய பட்டியலைப் போட முடியும். இருந்தாலும், சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன்.
காவலர் சேம நல நிதியின்கீழ் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழங்கும் நிதியினை 4 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
இந்தத் திட்டத்தின்கீழ் இருக்கின்ற உறுப்பினர் உயிரிழந்தால், வழங்கப்படக்கூடிய நிதி 50 ஆயிரம் ரூபாய் என்றிருந்தது. 1 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
10 ஆம் வகுப்பு தேர்வில் முதல் 10 rank-க்கில் வருகின்ற காவலர்களுடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி பரிசுத் தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.6,500/-என்பது ரூ.13,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.4,000/- என்பது ரூ.9,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் rank-க்கு வழங்கப்பட்ட ரூ.2,500/- என்பது, ரூ.5,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நான்காவது முதல் பத்தாவது rank வரை இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,000/-லிருந்து ரூ.4,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், 12 ஆம் வகுப்புத் தேர்வில், முதல் 10 rank-க்குள் வரக்கூடிய காவலர்களுடைய பிள்ளைகளுக்கு பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு, குறிப்பாக முதல் rank வருகிறவர்களுக்கு ரூ.7,500/-லிருந்து, தி.மு.க. ஆட்சியில் ரூ.15,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் rank-க்கு ரூ.6,500/-லிருந்து ரூ.11,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்றாம் rank-க்கு ரூ.3,500/-லிருந்து ரூ.7,000/- ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
(மேசையைத் தட்டும் ஒலி) 4 முதல் 10 rank இருக்கக்கூடியவர்களுக்கு ரூ.2,500/-லிருந்து ரூ.5,000/- வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
அதிக மதிப்பெண் பெறக்கூடிய 100 மாணவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு உயர் கல்வி வழங்கக்கூடிய திட்டம், 200 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல், அவர்களுக்கு 25,000 ரூபாய் என்றிருந்த உயர் கல்வித் தொகை 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
காவலரோ அல்லது அவர்களது வாரிசோ பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டால் வழங்கப்படுகின்ற கருணை நிதி 15 இலட்சம் ரூபாயிலிருந்து 20 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
Police insurance திட்டப்படி பணியில் இருக்கக்கூடிய காவலர் உயிரிழந்தால் வழங்கப்படுகிற 2 இலட்சம் ரூபாய் உதவித் தொகை 4 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
மருத்துவப் பரிசோதனைத் திட்டம் காவலருடைய மனைவிக்கும், பெண் போலீசாருக்கும் விரிவுபடுத்தப்பட்டது. போலீஸ் உணவு சலுகைகள் ஊர்க் காவல் படையினருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
காவலர் முதல் ஆய்வாளர் வரை 2,249 பேருக்கு சிறைத் தண்டனைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
கருணை அடிப்படையில் 2,592 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. காவலர் முதல் ஆய்வாளர் வரை இடர்படி- risk allowance 800 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
D.S.P. மற்றும் கூடுதல் D.S.P.-க்களுக்கு 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தலைமைக் காவலர் வரை இருக்கின்றவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் leave வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சிறப்பு போலீஸ்-Tamil Nadu Special Police Battalion-ல் பணிபுரியக்கூடிய அனைத்து காவலர்களுக்கும் weekly off விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் bus pass, Smart ID card வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி 29 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில் காவலர்களுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களையெல்லாம் இன்னும் நான் பட்டியலிட முடியும்.
இந்த ஆட்சியில் அனைத்து தரப்பினரையும் பேணிக் காப்பதைப்போலவே மக்களின் பாதுகாப்பில் இரவு பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய அயராது உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய காவலர்களின் நலனையும் பேணி பாதுகாத்து வருகிறோம்.
குறிப்பாக, பெண் காவலர்களுக்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
பெண்காவலர்களின் கணவரும் காவல்துறையில் பணியாற்றினால், ஒரே பகுதியில் பணியிடமாறுதல் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய பிறகு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு விரும்பிய ஊரில் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.
கருவுற்றிருக்கிற காலத்தில் சீருடை அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் காவலர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு, நடமாடும் கழிவறை வசதி செய்துதரப்பட்டுள்ளது.”
Also Read
-
“தமிழ்நாட்டு மீனவர்கள் தடையின்றி கைது.. உடனே நடவடிக்கை வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் Google Play, Unity Game Developer Program: அசத்தும் தமிழ்நாடு அரசு!
-
சமூகநீதிக்கான அரசியலையும் போராட்டத்தையும் நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு.. உங்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் கோவி. செழியன்!