M K Stalin
"தூறும் மழை.. சூடா காபி.." குடை பிடித்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை ரசித்த முதல்வர் !
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டி தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 3 பிரிவில் 30 போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, போட்டியை காணவரும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பரமபரிய கலாச்சாரம் நிறைந்த காலை நிகழ்ச்சிகளுக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பாரம்பரிய நடன கலையான பரதநாட்டியம், சிலம்பம் உள்ளிட்ட சிறப்பு கலைகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது, சிறிதளவு மழை பெய்ததால், முதல்வர் தனது கைகளால் குடையை பிடித்துக்கொண்டு, சூடாக காபி குடித்துக்கொண்டே கலை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாக, நேற்று இரவு சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் தொலைபேசி மூலம் குறைகளையும் கேட்டறிந்தார்.
அவர்களிடம் பேசிய முதலமைச்சர், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துவிட்டதா என்றும், தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் சரியாக கிடைக்கிறதா என்றும் கேட்டறிந்தார். இதையடுத்து ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து கேட்டறிந்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!