India
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : 73 MP-க்கள் நோட்டீஸ்!
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஒன்றிய பா.ஜ.க அரசின் செல்லுக்கும் கட்டளைக்கும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நடந்தது வரும் 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை தவிர்த்து மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களை மாற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை எதரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதல் படி செயல்படும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது 9 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாநிலங்களவை எம்.பிக்கள் தகுதிநீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் ஞானேஷ்குமாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவை எம்.பிக்கள் 73 பேர் மாநிலங்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நீடிப்பது இந்திய அரசியலமைப்பின் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகும் என்று மாநிலங்களவை எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!