India
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : 73 MP-க்கள் நோட்டீஸ்!
நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஒன்றிய பா.ஜ.க அரசின் செல்லுக்கும் கட்டளைக்கும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. நடந்தது வரும் 5 மாநில தேர்தல்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை தவிர்த்து மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களை மாற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை எதரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதல் படி செயல்படும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது 9 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மாநிலங்களவை எம்.பிக்கள் தகுதிநீக்க தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செயல்படும் ஞானேஷ்குமாரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலங்களவை எம்.பிக்கள் 73 பேர் மாநிலங்களவை செயலாளரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நீடிப்பது இந்திய அரசியலமைப்பின் மீதான ஒரு நேரடித் தாக்குதலாகும் என்று மாநிலங்களவை எம்.பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!