India
புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும்... அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு !
நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பர்திவாலா, விஸ்வநாதன் அமர்வு விசாரணை செய்தார்கள். அப்போது, அதிகரித்துள்ள சாலை விபத்துகள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.
அதன் படி, மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 138(1A) மற்றும் 210 D பிரிவுகளின் படி மோட்டார் பொருத்தப்படாத வாகனங்களான சைக்கிள், கை வண்டி உள்ளிட்டவற்றின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பை கண்காணிக்கும் வகையில் சாலை பாதுகாப்பு குறித்த புதிய விதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளை மாதிரியான விதிகளை அமல்படுத்த மாநில அரசுகள் விரும்பினால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!