India
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) பணியாற்றிய ஒரு மூத்த மேலாளர், சுமார் ரூ. 232 கோடி அளவிலான பொது நிதியை முறைகேடாக தன் தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அவரை கைது செய்துள்ளது.
சிபிஐயின் விசாரணையில், 2019-20 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் டேராடூன் விமான நிலையத்தின் பொறுப்பாளராக இருந்தபோது, அந்த மேலாளர் போலி மற்றும் இரட்டை கணக்குகளை உருவாக்கியுள்ளார். இதன்மூலம் சொத்துகளின் மதிப்பை அதிகரித்து, போலி ஆவணங்களைத் தயாரித்து நிதியை தன் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய நிதி முறைகேடுகள் அவர் பொதுமக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்ததைக் உறுதிப்படுத்துகிறது. இந்த முறைகேடு தொடர்பாக, ஜெய்ப்பூரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, இந்த ஊழலை உறுதிப்படுத்தும் பல முக்கிய ஆவணங்கள், சொத்து மதிப்புச் சான்றுகள், மற்றும் பிற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த நிதி, பல்வேறு வர்த்தக கணக்குகளுக்கும் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தற்போது அந்த மேலாளர் கைது செய்யப்பட்டு, இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!