India
ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவரா நீங்கள்? : உங்களுக்கான முக்கிய செய்தி இதோ!
இந்தியாவில் மிக முக்கியமான போக்குவரத்தில் ஒன்று ரயில் போக்குவரத்தாகும். எல்லா மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ரயில் சேவை இருப்பதால் அதிகமான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு, பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அவசரமாக நாம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ஒருநாளுக்கு முன்பாக தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதனால் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் பலருக்கும் தட்கல் டிக்கெட் கிடைக்காமல் இருந்து வருகிறது. பொதுமக்கள் அவசர பயணம் மேற்கொள்வதற்காக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் டிக்கெட் எடுக்க முயன்றாலும் எளிதாக கிடைக்க இல்லை. இதில் மோசடி நடப்பதாக பயணிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தட்கல் டிக்கெட் மோசடி தொடர்பாக 2.5 கோடி போலி கணக்குகளை கண்டறிந்து IRCTC முடக்கியுள்ளது. இந்நிலையில் ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆதார் அடிப்படையிலான OPT சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் ரயில்வே கவுன்டர்கள் அல்லது முகவர்கள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணம் செய்பவரின் ஆதார் சரிபார்ப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!