India
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்? : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி!
பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள அம்பேத்கர் விடுதி மாணவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திக்க சென்றார். அப்போது திடீரென போலிஸார் அவருக்கு அனுமதி மறுத்து மாணவர்களை சந்திக்க விடாமல் தடுக்க முயன்றனர்.
இதனால் காவல்துறைக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி நடந்து சென்றே மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
அப்போது, ”பீகார் போலிஸார் உங்களைப் பார்க்க விடாமல் என்னை தடுக்க பார்த்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. ஏன் என்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து வருகிறது” என ராகுல் காந்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை சந்திக்க பீகார் அரசு என்னைத் தடுப்பது ஏன்? பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்?. மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா? என ராகுல் காந்தி தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!