India
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்? : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி!
பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியில் உள்ள அம்பேத்கர் விடுதி மாணவர்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திக்க சென்றார். அப்போது திடீரென போலிஸார் அவருக்கு அனுமதி மறுத்து மாணவர்களை சந்திக்க விடாமல் தடுக்க முயன்றனர்.
இதனால் காவல்துறைக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி நடந்து சென்றே மாணவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.
அப்போது, ”பீகார் போலிஸார் உங்களைப் பார்க்க விடாமல் என்னை தடுக்க பார்த்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. ஏன் என்றால் மாணவர்களாகிய உங்கள் சக்தி என்னைக் கண்காணித்து வருகிறது” என ராகுல் காந்தி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களை சந்திக்க பீகார் அரசு என்னைத் தடுப்பது ஏன்? பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஏன் பயப்படுகிறார்?. மாநிலத்தின் கல்வியையும் சமூக நீதியையும் மறைக்கப் பார்க்கிறீர்களா? என ராகுல் காந்தி தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!