India
மது அருந்திய பெண்.. : பாலியல் வழக்கில் சர்ச்சை கருத்து சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம்!
உத்தரப்பிரதேச மாநிலம் அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், பாதிக்கப்பட்ட பெண் முதுகலை பட்டப்படிப்பு மாணவி என்பதால், தனது செயலின் நன்மை, தீமையைப் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக இருப்பதாக கூறியுள்ளார்.
தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், மதுபோதையில் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்று, அந்த வேதனையை அவரே தனக்கு வரவழைத்து, அந்த சம்பவத்துக்கு அவரும் காரணமாக இருந்துள்ளதாக தெரிவித்தார்.
சூழ்நிலை குற்றத்தின் தன்மை, ஆதாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண்கள் அமைப்புகள் நீதிபதியின் தீர்ப்புக்கு கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!