India
“37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க வேண்டும்!” : ஒன்றிய அமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்!
2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “நாங்கள் தேர்தலில் வென்றால், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படும்” என உறுதி மொழி அளித்தார் தற்போதைய பிரதமர் மோடி.
ஆனால், வாக்குறுதி அளித்தும், மோடி பிரதமராக பதவியேற்றும் சுமார் 10 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதே தவிர, குறைந்ததாக இல்லை.
இதனைக் கண்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற முறை கடிதம் எழுதியும், நேரில் சென்று வலியுறுத்தியும், அது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதில், தொடர்ந்து மந்தம் காண்பித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் வழக்கறிஞர் சுதா அறிவுறுத்தலின் பேரில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
அக்கடிதத்தில், அவர் குறிப்பிட்டதாவது, “கடல் எல்லைக்கடந்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால், செப்டம்பர் 21ஆம் நாள் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடியாக வழிவகுக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு மீனவர்களுக்கு சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் விதிக்கப்பட்டுள்ள அபராதத்தையும் நிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!