India
மணிப்பூரில் அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்கள் : ஆளுமை தோல்வியில் பா.ஜ.க!
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, பிரிவினையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் உச்சம் தொட்டுள்ளன.
இதனால், இந்தியாவிலேயே மக்களாட்சி கடமையாற்றுவதில் அதாவது வாக்களிப்பில் முக்கிய பங்கு வகித்த மணிப்பூர் மக்கள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தங்களது முழு ஈடுபாட்டை செலுத்த இயலாமல் போனது.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், உறவுகளையும் இழக்க நேரிட்டுள்ளது. எனினும், இதில் குளிர் காயவே விரும்பி வரும் பா.ஜ.க, வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சுமார் 1 ஆண்டிற்கும் மேலாக தொடரும் மணிப்பூர் வன்முறை, கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாகியுள்ளது. அதன் விளைவாக, செப்டம்பர் 1 - செப்டம்பர் 9க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் மாணவர்களே அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க அரசின் ஆளுமை தோல்வியைக் கண்டித்து, ராஜ் பவனை முற்றுகையிட்டனர் மாணவர்கள். இதன் வழி, மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Also Read
-
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! : தி.மு.க சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் தாக்கல்!
-
“நான் முதல்வனின் அடுத்த version-ல் சர்வதேச அளவிலான சாதனைதான்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
UPSC முடிவுகள் வெளியானது! - ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்று அசத்தல்!
-
டி20 உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்தியா…பும்ரா குறித்து சஞ்சு சாம்சன் சொன்ன அந்த வார்த்தை!
-
“‘பட்டா’ என்ற பல ஆண்டு கனவை நம்முடைய அரசு இன்றைக்கு நனவாக்கி இருக்கிறது!” - துணை முதலமைச்சர் உதயநிதி உரை!