India
100% VVPAT வாக்குகள் எண்ண முடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு சாதமாக முறைகேடுகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுக்களையும் 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழக்கியுள்ளது.
அதில், ”45 நாட்கள் சின்னம் பதிவேற்றும் இயந்திரத்தை சீல்வைத்து பாதுகாக்க வேண்டும். வேட்பாளர்கள் சந்தேகம் எழுப்பி 7 நாட்களுக்குள் கோரிக்கை வைத்தால் மைக்ரோ கண்ட்ரோலரை சோதனை செய்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.
சந்தேகம் எழுப்பும் வேட்பாளர்கள் தங்களுடைய சொந்த செலவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சோதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். சோதனையின் போது முறையீடு செய்யப்பட்டது உறுதியானால் அந்த பணத்தை தேர்தல் ஆணையம் திரும்ப வழங்க வேண்டும்" நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் ஆலோசனை வலுங்கியுள்ளனர்.
மேலும், VVPAT இயந்திரத்தில் அச்சாகும் சின்னத்தை வாக்காளர்கள் பெற்று தனி பெட்டியில் இட உத்தரவிட கோரிய கோரிக்கையையும், வாக்குச்சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !