India
உ.பி : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் நண்பர்... அம்மாவின் சம்மதத்தோடு நடந்த கொடூரம் !
உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 10 வயது சிறுமி தனது தாயாருடனும், அண்ணன் ஒருவனுடனும் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தந்தை 4 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமியின் தாயின் நண்பர் ஒருவர் அடிக்கடி வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் சிறுமியிடமும், அவரின் அண்ணனுடனும் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து தாயிடம் புகார் கூற அவரின் சம்மதத்துடனே இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் அண்ணன் அந்த வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னரும் தாயின் நண்பரின் பாலியல் தொல்லை தொடர்ந்ததால் அவரும் வீட்டில் இருந்து வெளியேறி டெல்லிக்கு சென்றுள்ளார்.
அங்கு தனியாக சுற்றுத்திரிந்த சிறுமியை போலிஸார் மீட்ட நிலையில், அவரின் நடைபெற்ற விசாரணையில் இந்த கொடிய சம்பவம் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் தாயையும் அவரின் நண்பரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வெளியானது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை.. விரைவில் பதில் கூறுகிறேன்” : தங்கம் தென்னரசு!
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!