India
காவல்நிலையத்தில் புகுந்து போலிஸாரை மிரட்டிய பா.ஜ.க அமைச்சர் : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி!
பா.ஜ.க ஆட்சி செய்யும் மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் நரேந்திர சிவாஜி படேல். இவரது மகன் அபிக்யான். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அபிக்யான் காரில், திரிலங்கா பகுதியில் சென்றுள்ளார்.
அப்பாது இருசக்கர வாகனத்தில் வந்த பத்திரிகையாளருக்கும் அபிக்யானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பத்திரிகையாளரை அமைச்சரின் மகன் தாக்கியுள்ளார். இதை தட்டிகேட்டு வந்த அருகே இருந்த உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவியையும் அபிக்யான் தாக்கியுள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஷாபுரா காவல்நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு வந்த அமைச்சரின் மகன் அபிக்யான் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அபிக்யான் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் உடனே காவல்நிலையம் சென்று மகனை மீட்டுள்ளார். மேலும் மகனிடம் தகராறு செய்த 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்வதற்குக் காரணமாக இருந்துள்ளார். தவறு செய்த மகனை கண்டிக்காமல் மீட்பதற்கு பா.ஜ.க அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!