India
”தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க” : டெரிக் ஓ பிரையன் MP!
ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளதாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
முக்கியமாக முதல்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவும் நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் பல்லடம், சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதை உற்றுநோக்கினால், முதற்கட்ட தேர்தல் நடைபெறு வதன் காரணமாகவே மோடி அடிக் கடி தமிழ்நாடு வந்தாரா? மக்களவை தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே மோடியிடம் கொடுக்கப் பட்டதா? போன்ற சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோசமான வழிகளை கையாளுகிறது பா.ஜ.க.
மக்களைச் சந்திப்பதில் பா.ஜ.க மிகவும் பதற்றத்துடன் உள்ளது.தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!