India
”தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க” : டெரிக் ஓ பிரையன் MP!
ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் தேதி பிரதமர் மோடியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப திட்டமிடப்பட்டுள்ளதாகப் பலத்த சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
முக்கியமாக முதல்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டின் மொத்த வாக்குப்பதிவும் நிறைவு பெறும் நிலையில், பிரதமர் மோடி ஒரே மாதத்தில் பல்லடம், சென்னை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என 4 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதை உற்றுநோக்கினால், முதற்கட்ட தேர்தல் நடைபெறு வதன் காரணமாகவே மோடி அடிக் கடி தமிழ்நாடு வந்தாரா? மக்களவை தேர்தல் அறிவிப்பு முன்கூட்டியே மோடியிடம் கொடுக்கப் பட்டதா? போன்ற சந்தேகங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் மேற்குவங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோசமான வழிகளை கையாளுகிறது பா.ஜ.க.
மக்களைச் சந்திப்பதில் பா.ஜ.க மிகவும் பதற்றத்துடன் உள்ளது.தேர்தல் ஆணையத்தை தங்களது கட்சியின் அலுவலகமாக மாற்றிவிட்டது பா.ஜ.க சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!