India
39 தொகுதி - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் : ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி எது?
இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாகப் பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.கவை வீழ்த்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கித் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சத்தீஸ்கர் 6, கர்நாடகா 7, கேரளா 16, தெலங்கானா 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல் திருவனந்தபுரத்தில் சசிதரூர், கண்ணூர் தொகுதியில் கே.சுதகாரணம், ஆலப்புழா கே.சி.வேணுகோபால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் புறநகர் தொகுதியில் டி.கே.சுரேஷ் போட்டியிடுகிறார். இந்த 39 தொகுதியில் 15 பேர் பொது வேட்பாளர்கள். 24 பேர் SC,ST,OBC பிரிவை சேர்ந்தவர்கள்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!