India
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை : தலைமறைவான 3 சிறுவர்கள்... டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி !
தலைநகர் டெல்லியின் தென்மேற்கில் அமைந்துள்ள கபஷேராவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை இவரின் நண்பர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு வருகை தருமாறு அழைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் தனது நண்பனின் அழைப்பை ஏற்று அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நண்பனின் வீட்டில் அவரின் இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். சிறுமியின் நண்பரின் பெற்றோர் வெளியே சென்றிருந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அந்த மூன்று பெரும் சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த போதே பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்து அவரை வீட்டில் இருந்து அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
பின்னர், இது குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக உள்ள 3 குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். இதனிடையே பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரும் மைனர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ரோஜா!