India

செல்போன் பேச்சுக்கு இடையூறாக இருந்ததால் ஆத்திரம்... பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய் !

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிக் என்ற பகுதியை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவருக்கும் அஃப்சானா கட்டூன் என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த வியாழக்கிழமையும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது 2 வயது மகனுடன், தனது அறைக்கு சென்ற மனைவி அஃப்சானா, கதவை பூட்டிக்கொண்டு தனது உறவினருடன் போனில் பேசியுள்ளார். அந்த சமயத்தில் அந்த குழந்தை அழுதுள்ளது. ஏற்கனவே எரிச்சலில் இருந்த அந்த பெண், குழந்தை அழுததால் மேலும் எரிச்சலடைந்துள்ளார். இதனால் அந்த குழந்தையின் கழுத்தை சற்று இறுக பிடித்துள்ளார்.

பிறகு அந்த குழந்தை அழுவதை நிறுத்தியவுடன், அதனை கவனிக்காமல் அந்த அறையை விட்டு தாய் அஃப்சானா வெளியே சென்றுள்ளார். பின்னர் அறைக்கு வந்த கணவர் நிஜாமுதீன், தனது குழந்தையை எழுப்பியுள்ளார். அப்போது குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை என்பதால் பயந்துபோன அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கே பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சையடைந்த குடும்பத்தினர், அஃப்சானாவை வசை பாடினர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அஃப்சானாவின் மாமனார் ரோஜான் அன்சாரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும்போது அஃப்சானாவால் தான் குழந்தை இறந்தது தெரியவந்தது.

மேலும் தாய் அஃப்சானா, தனது குழந்தையை வேண்டுமென்று கொலை செய்யவில்லை என்றும், கோபத்தில் கழுத்தை பிடித்ததால் இறந்துவிட்டதாகவும் கதறி அழுதுகொண்டே கூறினார். தற்போது தாய் அஃப்சானா கைது செய்யப்பட்டதோடு, குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: செல்போனை பிடுங்கிய கணவன்... ஆத்திரத்தில் கத்தரிக்கோலால் கண்ணில் குத்திய மனைவி - உ.பியில் அதிர்ச்சி !