India
மகளிருக்கு ரூ.1500 உதவித் தொகை : திராவிட மாடல் அரசை பின்பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிச. 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. தனது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம் பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்பிதயை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. இது பா.ஜ.கவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றித் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இந்தியாவே போற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்ததைபோன்றே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.1500 உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைவருக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி, ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பள்ளி கல்வி இலவசம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உள்ளிட்ட 59 தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!