India
பேய் ஓட்டுவதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை: சாமியார் அதிரடி கைது.. உ.பி-யில் அதிர்ச்சி !
உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை சாமியார் என்று சொல்லிக்கொண்டு 52 வயதுடைய மோதிலால் என்ற நபர் வலம்வந்துள்ளார். இவரிடம் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய 18 வயது மகளை அழைத்து வந்துள்ளனர்.
வந்தவர்கள் தங்கள் மகளுக்கு பிரச்சனை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், பேயை விரட்ட பூஜைக்காக ரூ.4 ஆயிரம் தரவேண்டும் என்றும் அந்த சாமியார் கூறியுள்ளார்.
அதனைத் நம்பிய அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரும், சாமியார் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். உடனே ஒதுக்குபுறமாக இருக்கும் கோவிலுக்கு இளம்பெண்ணை தனியாக கூட்டிசென்றுதான் பேய் ஓட்ட முடியும் என்று கூறிய சாமியார், அந்த பெண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்றவர் பேய் ஓட்டுவதாக கூறி அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து கூறினால் கொலை செய்துவிடுவேன் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பிய இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்த சாமியாரை கைது செய்தனர். இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இதுதான் என்னுடைய 2026 தேர்தலுக்கான வாக்குறுதி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன அதிகாரபூர்வ தகவல்!
-
தமிழ்நாடு அரசின் ‘உங்க கனவ சொல்லுங்க..’ : உங்கள் எதிர்கால கனவுகளை தெரிவிப்பது எப்படி? - விவரம் உள்ளே!
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!