India
ஆட்டோ மீது மோதிய லாரி - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு நேர்ந்த துயரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்திற்குட்பட்ட தாஹோத் - அலிராஜ்பூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் விவரங்களை போலிஸார் சேகரித்து வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு பிடி வாரண்ட்... காரணம் என்ன?
-
குழந்தை திருமணத்தை தடுத்த அதிகாரிகள்... ஆத்திரத்தில் சிறுமியை கொடூரமாக கொலை செய்த இளைஞர் !
-
திண்டுக்கல் சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பிரசாரம் செய்ய வந்த பாஜக வேட்பாளர் விரட்டியடிப்பு - பஞ்சாபில் தொடரும் விவசாயிகள் போராட்டம் !
-
10 மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை : பிரஜ்வல் வீடியோ வழக்கில் தொடர்புடைய பாஜக நிர்வாகி அதிரடி கைது !