India
Email-ல் வந்த ஜாமீன் உத்தரவு, திறந்து பார்க்காத சிறை அதிகாரிகள்: 3 வருடம் சிறையில் இருந்த இளைஞர்!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தன்ஜி தாக்கூர். 27 வயது இளைஞரான இவர் 2020 கொலைக் குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வருடம் தான் கொரோனா தொற்று பரவியதால் வழக்குகள் அனைத்தும் ஆன்லைனின் நடைபெற்று வந்தது.
இதனால் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையும் ஆன்லைனின் நடைபெற்றுள்ளது. பின்னர் இவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டு, அந்த உத்தரவுகளைச் சிறை நிர்வாகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால் இந்த மின்னஞ்சலைச் சிறை அதிகாரிகள் திறந்து பார்க்காமல் இருந்துள்ளனர். இதனால் சந்தன்ஜி தாக்கூர் ஜாமீன் கிடைத்தும் 3 வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். இவர் மீண்டும் ஜாமீன் கேட்டு முறையிட்டபோதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.சுபேஹியா மற்றும் எம்.ஆர்.மெங்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜாமீன் கிடைத்தும் 3 வருடங்கள் சிறையிலிருந்த குற்றவாளிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்த இழப்பீட்டை 15 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !