India
இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் கோடிக்கணக்கான பணம் யாருடையது?... மோடிக்கு கேள்வி எழுப்பிய ராகுல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது பிரச்சாரத்தைக் காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற ஒரு பிரச்சார பொதுக் கூட்டத்தில் உரையாடினார். அப்போது ஒன்றிய பா.ஜ.க அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.கவும் மோடியும்2-3 கோடீஸ்வரர்களுக்காக உழைக்கின்றனர். பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி, இந்தியாவுக்கு வெளியே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். சந்தையில் தனது சொந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையை உயர்த்தியுள்ளார்.
அதானியிடம் இந்தியாவின் பொதுச் சொத்துக்களை ஒன்றிய அரசு விற்று வருகிறது. ரயில் நிலையங்களையும் அவருக்கு மோடி அரசு விற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அனைத்தையும் அதானியிடம் ஒன்றிய அரசு விற்கிறது.
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அதற்கு மாறாக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்தியாவுக்கு வெளியே செல்கிறது. இது யாருடைய பணம் என்பதை மோடி சொல்ல வேண்டும்.
பா.ஜ.க நாடு முழுவதும் வெறுப்பைப் பரப்பி வருகிறது. ஜாதி, மதம், மொழி என பிரித்து மக்களை சண்டையிட வைக்கிறது பா.ஜ.க. எங்கெல்லாம் வெறுப்பைப் பரப்புகிறோர்களோ அங்கு எல்லாம் காங்கிரஸ் அன்பைப் பரப்பும். இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை பா.ஜ.க உடைத்துவிட்டது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு சிறு வணிகர்களை அழித்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !
-
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !
-
மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !
-
காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !
-
”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!