India
பொதுக்கழிப்பறையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 சிறுவர்கள் செய்த கொடூரம்.. மும்பையில் அதிர்ச்சி !
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், குற்றங்கள் குறைந்த வண்ணம் இல்லை. அதிலும் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தினம் ஒன்று என்ற அளவில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மும்பையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் கட்கோபார் என்ற பகுதியில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் இருந்து பொதுக்கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது இதனை கவனித்த அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் கழிப்பறைக்கு சென்று அங்கு இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
அதோடு நிற்காத சிறுவர்கள் அந்த பாலியல் வன்கொடுமை வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ அந்த பகுதியில் பரவத்தொடங்கிய நிலையில், சிறுமியின் வீட்டாருக்கு இது குறித்து தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!