India
மனித எலும்பு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்.. மூட நம்பிக்கையால் மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார்!
மகாராஷ்டிராவில் சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, குழந்தை பெறுவதற்காக மருமகளை எனித எலும்பால் செய்த பொடியைச் சாப்பிடச் சொல்லி மாமியார் மற்றும் கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் பல சாமியார்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்படிச் சென்றபோது ஒரு சாமியார், மனித எலும்பால் செய்யப்பட்ட பொடியைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மருமகளைக் கொங்கன் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, மனித எலும்பைச் சாப்பிட சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து போலிஸார் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் குடும்பத்தினர் நன்கு படித்திருந்தும், குழந்தைக்காக மருமகளை மனித எலும்பு சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!