India
மனித எலும்பு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்.. மூட நம்பிக்கையால் மருமகளை கொடுமைப்படுத்திய மாமியார்!
மகாராஷ்டிராவில் சாமியார் ஒருவரின் பேச்சைக் கேட்டு, குழந்தை பெறுவதற்காக மருமகளை எனித எலும்பால் செய்த பொடியைச் சாப்பிடச் சொல்லி மாமியார் மற்றும் கணவர் கொடுமைப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நடந்து சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் பல சாமியார்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்படிச் சென்றபோது ஒரு சாமியார், மனித எலும்பால் செய்யப்பட்ட பொடியைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மருமகளைக் கொங்கன் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, மனித எலும்பைச் சாப்பிட சொல்லி கொடுமைப் படுத்தியுள்ளனர். இது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து போலிஸார் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் குடும்பத்தினர் நன்கு படித்திருந்தும், குழந்தைக்காக மருமகளை மனித எலும்பு சாப்பிடச் சொல்லி கொடுமைப்படுத்திய சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!