India
கேரளாவை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. ஆசிரியருக்கு 62 ஆண்டு சிறை தண்டனை !
மதரஸாவில் பயிலும் 6 வயது சிறுமி ஒருவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 62 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி என்ற பகுதி உள்ளது. இங்கு இருக்கும் மதரஸா என்று சொல்லப்படும் இஸ்லாமிய மத போதனைகளை கற்றுத் தரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு சிறுமிகள் பயிலும் இங்கு கடந்த 2019-ம் ஆண்டு 30 வயதான அப்துல் ஹக்கீம் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அதே ஆண்டு இங்கு பயிலும் 6 வயது சிறுமி ஒருவரை யாருமில்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிறகு சிறுமி வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற போது, அவரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது தனக்கு நேர்ந்ததை தனது பாஷையில் சிறுமி கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் உடனே இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ஹக்கீமை கைது செய்து விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணையில் காவல்துறையினர் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தனர். தொடன்கிர்த்து இந்த நடைபெற்று வந்ததில், தற்போது குற்றவாளி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு கேரள நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
அதன்படி 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி அப்துல் ஹக்கீமிற்கு 62 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த 3 லட்ச ரூபாய் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும் என்றும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
"தேர்தல் ஆணையத்தை தனது கிளை அமைப்பாக மாற்றிவிட்டது ஒன்றிய பாஜக அரசு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
-
"குடியரசுத் தலைவரின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்" - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் !
-
தொடர் பாலியல் புகாரின் எதிரொலி... AMMA சங்க 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை தலைவரான பெண்!
-
அது தனி வீடல்ல, அடுக்குமாடி குடியிருப்பு முருகேசா... பாஜக பரப்பிய பொய்யை அம்பலப்படுத்திய TN Fact Check!
-
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக மோசடி: இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை!