India
வாய் பேச முடியாத தாயின் ஏக்கம்.. சிறுவனின் கனவை நிறைவேற்றிய இளைஞர்.. நவீன கர்ணனுக்கு குவியும் பாராட்டு!
23 வயதான ஹர்ஷா சாய் என்பவர் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்தவர். கல்லூரி முடித்த பின்னர் தனியே YOUTUBE -இல் சேனல் தொடங்கி உடற்பயிற்சி வீடியோக்களை அதில் பதிவிட்டு வந்தார். இதன் காரணமாக அவரின் வீடியோகளுக்கு SUBSCRIBERS வரத்தொடங்கினர்.
அதன் பின்னர் 4 லட்ச ரூபாய் காரை 5 முழுக்க முழுக்க 5 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கி அதை தனது சேனலில் வெளியிட்டார். இந்த சம்பவத்தில் பெரும் புகழ் பெற்ற அவருக்கு மீடியா வெளிச்சமும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பேய் வீட்டில் தங்குவது போன்ற வீடியோக்களை அவர் வெளியிட அவரை பின்தொடருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் சென்றது.
இதன் பின்னர் YOUTUBE மூலம் தான் சம்பாதிக்கும் காசினை மக்களுக்கு செலவிட நினைத்த அவர், சிறுவனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த வீடியோவும் இணையத்தில் பெரும் ஹிட் கொடுக்க அதன்பின்னர் பலருக்கு உதவ தொடங்கினார்.ஏழை குடும்பம் ஒன்றுக்கு வீடு கட்டி கொடுப்பது, பல ஆயிரம் பேருக்கு டேங்க் புல் என்னும் அளவுக்கு பெட்ரோல் போட்டு கொடுப்பது என தற்போது ஒரு வள்ளல் என்ற அளவில் பேசப்படுகிறார்.
இந்த நிலையில் அவர் செய்துள்ள மற்றொரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. சாலையில் செல்லும்போது சிறுவன் ஒருவன் ஒரு கடையின் முன் நின்று சைக்கிள் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அதனை ஹர்ஷா சாய் பார்த்து அந்த சிறுவனிடம் பேசியுள்ளார்.
அப்போது தன்னிடம் இறந்த சைக்கிள் உடைந்துவிட்டதால் புது சைக்கிளை வாங்கித்தர வீட்டில் வசதியில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். உடனடியாக சிறுவனை அழைத்து அந்த கடைக்கு சென்ற ஹர்ஷா சாய் சிறுவனுக்கு புதிய சைக்கிள் வாங்கி தந்ததோடு அந்த கடையில் சிறுவன் கேட்ட விளையாட்டு பொருள்களையும் வாங்கிக்கொடுத்துள்ளார்.
பின்னர் சிறுவனை அழைத்துக்கொண்டு அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் சிறுவனின் தாய்க்கு வாய் பேச முடியாது என்பது தெரியவந்துள்ளது. ஹர்ஷா சாயின் செயலை அறிந்த அந்த தாய் அவரை கையெடுத்து கும்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனுக்கு உதவியதாக பலரும் ஹர்ஷா சாயை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“வெற்றி வாகை சூடுவதற்கான முன்னோட்ட அணிவகுப்புதான் முப்பெரும் விழா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் : “தேர்தல் ஆணையத்தின் மிரட்டல்களுக்கெல்லாம் தமிழ்நாடு பயப்படாது” - முரசொலி!
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !