India

“சிறுமியை ‘item’ என அழைத்த இளைஞருக்கு 18 மாதம் சிறை” : தீர்ப்புக்கு நீதிபதி சொன்ன காரணம் என்ன தெரியுமா?

பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பிரச்னைகள் தொடர்பாக தொடர்ப்படும் வழக்குகளில் நீதிமன்றம் தனிகவனம் செலுத்த வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்திய அரசியலமைப்பு சாசனம் சரத்து 15(3) பிரிவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, சிறப்பு ஏற்பாடு செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே அவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும் என தெரிவித்திருகின்றனர்.

அந்தவகையில் மும்பை நீதிமன்றம் சிறுமியை ஆபாசமாக பேசிய இளைஞருக்கு ஓராண்டு சிறைதண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளதற்கு பெண்கள் அமைப்பினர் பெரும் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை பகுதியில் கடந்த 2015ம் ஆண்டும் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடித்துவிட்டு வீடு திருப்புள்ளார். அப்போது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுமியைக் கிண்டல் செய்துள்ளார். அதோடு தலை முடியை பிடித்து இழுத்து கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கு மும்பை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி எஸ்.லே அன்சாரி விசாரித்து வந்தார். இந்நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி தனது இறுதி தீர்ப்பை வழங்கினார்.

இதனால் சிறுமிக்கு இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிறுமியை அந்த இளைஞர் இழிவான ஒரு சொல்லாக கருத்தப்பட்டும் சொல்லை பயன்படுத்தி சிறுமியை அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட நபரால் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. எனவே குற்றம் சாட்டப்பட்டவரை காலம் தாழ்த்தாமல் தண்டனை வழங்குவது அவசியமான ஒன்று.

அதன்படி சிறுமியை பாலியல் ரீதியாக (iteam) இழிவான செல்லால் அழைத்த 25 வயது இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் பெண்களை இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது, இது பெரும் வேதனைக்குரிய விசயமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை.. தேச விரோத சட்டத்தில் கைதான பேராசிரியர் சாய்பாபா விடுதலை - நீதிமன்றம் அதிரடி !