India
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகும் உ.பி: ஆட்டோவில் 18 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
உத்தர பிரதேச மாநிலத்தின் சட்ட ஒழுங்குதான் அனைத்து மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கூறி இருந்த நிலையில் ஆட்டோவில் வைத்து இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 18 வயது இளம் பெண் ஒருவர் டியூஷன் சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேர் சேர்ந்து கொண்டு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்று இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்த விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து அருகே இருந்த காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
பின்னர் போலிஸார் அந்த பெண்ணை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் சென்று விட்டு வீடு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!