India
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகும் உ.பி: ஆட்டோவில் 18 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
உத்தர பிரதேச மாநிலத்தின் சட்ட ஒழுங்குதான் அனைத்து மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் கூறி இருந்த நிலையில் ஆட்டோவில் வைத்து இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் 18 வயது இளம் பெண் ஒருவர் டியூஷன் சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய 2 பேர் சேர்ந்து கொண்டு ஒதுக்குப் புறமான இடத்திற்குச் சென்று இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்த விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை ஆட்டோவில் இருந்து இறக்கி விட்டுள்ளனர். இதையடுத்து அருகே இருந்த காவல்நிலையத்தில் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார்.
பின்னர் போலிஸார் அந்த பெண்ணை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டியூசன் சென்று விட்டு வீடு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜகவின் வண்டவாளத்தை அம்பலப்படுத்தும் Youtuber குறித்து அவதூறு பரப்பும் பாஜகவினர்... குவியும் கண்டனம் !
-
இங்கிலாந்து வாழ் இந்தியர்களாலும் வெறுக்கப்படும் மோடி!
-
இந்தியாவிற்கு அவப்பெயர் தேடி தந்த மோடி! : முதலீடு செய்ய தாமதிக்கும் Tesla!
-
ஆபாச வீடியோ விவகாரம் : பிரஜ்வல் ரேவண்ணா தப்பிக்க உதவியவர் யார்? மோடி மௌனத்தை குறிப்பிட்டு D.ராஜா கேள்வி!
-
பாலியல் புகார் : மகனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தந்தை : பாஜக - JDS கூட்டணிக்கு சிக்கல் !