India

மனைவிக்கு வாட்சப்பில் வந்த ஆபாச செய்திகள்.. மூளையாக செயல்பட்ட கணவன் - பின்னணி என்ன ?

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார் ஆகாஷ். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

ஒருமுறை இப்படி ஒரு தகராறில் மனைவியை ஆகாஷ் வெளியே அனுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகாஷ் குடும்பம் மீது புகார் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன் மீதும் தங்கள் குடும்பம் மீதும் கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்கும்படி மனைவியை மிரட்டியுள்ளார் ஆகாஷ். ஆனால் அதற்கு விடாப்பிடியாக அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் மிகவும் கோபமடைந்த ஆகாஷ் தான் அவமான பட்டது போல், தனது மனைவியும் பட வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி தனது நண்பர்களுக்கு தனது மனைவியின் வாட்சப் எண்ணை அனுப்பி ஆபாசக பேசுமாறு கொடுத்துள்ளார். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு என அவரது எண்ணை பரிமாறி ஆபாசமாக பேசியும் புகைப்படம் அனுப்பியும் ஆகாஷ் மனைவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் அவர் காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அங்குள்ள அதிகாரிகள் சரிவர அவருக்கு பதிலளிக்கவில்லை என்பதால் மாநில மகளிர் ஆணையத்தை அணுகியுள்ளார். அதன் பின் அந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மகளிர் காவல் உதவி ஆணையருக்கு ஆணையம் உத்தரவிடப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கணவனே மனைவியின் எண்ணை நண்பர்களுக்கு பகிர்ந்து ஆபாசமாக பேச சொல்லிய விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மனைவியைத் திட்டியதால் ஆத்திரம்.. தம்பியை கார் ஏற்றி கொலை செய்த அண்ணன்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!